மெலிதாய்
துகிலென படர்கின்றது
புலப்படாத கண்ணாடி
உனக்கும் எனக்குமான
இடைவெளியில்!
இந்நாட்களில்
பலமுறை முட்டிமோதி
நெற்றி தேய்த்தோம்
குறைகின்ற
தொடு தூரத்தில்!
சிறகுகளின் நிறம் ஒவ்வொன்றும் எனது அகம் மற்றும் புறம் சார்ந்த சிந்தனைகளின், பார்வைகளின் பிரதிபலிப்பு! வாழ்க்கை பறவையின் சிறகுகளனைத்தும் கவிதையெனத் தோன்றும் எனக்கு!