சிறகுகளின் நிறம் ஒவ்வொன்றும்
எனது அகம் மற்றும் புறம் சார்ந்த
சிந்தனைகளின், பார்வைகளின் பிரதிபலிப்பு!
வாழ்க்கை பறவையின் சிறகுகளனைத்தும்
கவிதையெனத் தோன்றும் எனக்கு!
Sunday, August 15, 2010
முடிவுகள்
இதுவரை
முக்கியமான முடிவுகள்
இதுவா அதுவாவென
இரு தண்டவாளங்களின் மேலெ
தடுமாறி பயணிக்கின்றன
தூரத்தே இரு மனநிலைகளும்
இணைவதுவாய் தோற்றம்
கடந்து சென்றபோதும்
முற்று பெறாத முடிவுகள்!
No comments:
Post a Comment