Sunday, August 15, 2010

நூற்றாண்டு கனவு

அறுபத்தி மூன்றாகின்றது
அகவை - எம்
தாய் திருநாட்டின்
சுதந்திர தேவிக்கு!
முதல் பத்தில்
முதிர்ச்சியடைந்து
முயற்சிகள் பல கண்டது!
இடையில் இலக்கில்லாமல்
இன்னல்கள் நேர்கொண்டது!
இழுத்து செல்லும்
இதிகாசத் தலைவர்களின்
பரிகாச பாதக செயல்களுக்கு
அரசியலென பெயரிட்ட
நயவஞ்சகமும் கண்டது!
எழுத்தறிவு கொண்டவரின்
எண்ணிக்கை உயர்வினாலும்
திறைகடல் தாண்டிய
திறன்மிகு இளையவர்களினாலும்
புதியதொரு விடியலும் கண்டது!
பல்லாண்டுகளாய் தொடரும்
'வளர்கின்ற' நாடெனும் பட்டம்
நூற்றாண்டிற்குள்ளாவது
மாறிட மெய்படுமோ!

No comments: