சன்னல் வழி தெரியும் மரங்கள்
சிறப்பானவைதாம்
எங்கிருந்தாலும்
சூரிய கடிகாரம் போல்
வாழ்வுக் கடிகாரம் இந்த
சன்னல் மரங்கள்
எப்பொழுது பார்த்தாலும்
அன்றைய மனநிலையை
துல்லியமாய் காட்டிடும்
அந்தந்த சூழலுக்கேற்ப
வடிவமைத்துக்கொண்டே
வளர்ந்து வரும்
காணும் கண்களுக்கோ
கவிதையாக உள்புகும்
மரத்தின் நிழற்படம்
என் பிறப்பிடத்தின் சன்னல் மரமும்
என் இருப்பிடத்தின் மரமும்
என் வழியே இணைந்திருக்கும்!
—கி.வினோத்