காதலர் தினமன்று கருப்புதினமாக்கிய கோழை வதம். Feb 14, 2019 அன்று நடந்த வன்முறை தாக்குதலில் இன்னுயிர் நீத்த 44 இந்திய வீரர்களுக்கு வீர வணக்கமும் அஞ்சலியும் இந்தக் கவிதை - கி.வினோத்
#புல்வாமா #pulwama
படையலுக்கு நேர்ந்துவிடும் பலியாடுகள் இல்லை நீவிர்
படைகளுக்கு வலு சேர்க்கும் சிறுத்தைகள் அல்லவா நீவிர்!
வீரமுடன் எல்லை காப்பதும் போர்புரிவதும் தினசரி அலுவல்
விவேகமுடன் கலகம் உட்பூசல் கையாள்வது பகுதி நேரம்
வேட்கையுடன் தீவிரவாதம் தகர்ப்பது பட்டியலிட்ட பணி
பாசமுடன் பேரிடர் வதைக்கும் மக்கள் மீட்பது உமது மாண்பு
நேசமுடன் மனை மக்கள்விட்டு தனித்து வாடுவதும் பண்பு
பெருமையுடன் பணியிலும் பனியிலும் உயிர் தியாகம் சிறப்பு
வரம்புகள் பிரித்து விதிமுறையுடன் தாக்குபவன் தேவலை
நரம்புகளின்றி கொடும்நியதி வகுக்கும் கோழைகளின் வேலை
பயமேதுமின்றி பகட்டாய் ஆளும் அரசோ அதன் எந்திரமோ
பாதுகாப்பு குறைவை வெட்கமின்றி கடமையாக்கும் காவலோ
பச்சை துரோகமென உணர்ந்திடாத ஆயுத ஊழல் பேரங்களோ
பக்கத்துணையென நடித்து முதுகினில் குத்தும் பலரை தாங்குவீர்
தம் மண்ணின் மைந்தரை கண்மணிகளாய் காத்திடும்
தங்களுக்கு எம் தந்தையரென பாசம்பாராட்டுவதன்றி என் செய்வது!
#புல்வாமா #pulwama
படையலுக்கு நேர்ந்துவிடும் பலியாடுகள் இல்லை நீவிர்
படைகளுக்கு வலு சேர்க்கும் சிறுத்தைகள் அல்லவா நீவிர்!
வீரமுடன் எல்லை காப்பதும் போர்புரிவதும் தினசரி அலுவல்
விவேகமுடன் கலகம் உட்பூசல் கையாள்வது பகுதி நேரம்
வேட்கையுடன் தீவிரவாதம் தகர்ப்பது பட்டியலிட்ட பணி
பாசமுடன் பேரிடர் வதைக்கும் மக்கள் மீட்பது உமது மாண்பு
நேசமுடன் மனை மக்கள்விட்டு தனித்து வாடுவதும் பண்பு
பெருமையுடன் பணியிலும் பனியிலும் உயிர் தியாகம் சிறப்பு
வரம்புகள் பிரித்து விதிமுறையுடன் தாக்குபவன் தேவலை
நரம்புகளின்றி கொடும்நியதி வகுக்கும் கோழைகளின் வேலை
பயமேதுமின்றி பகட்டாய் ஆளும் அரசோ அதன் எந்திரமோ
பாதுகாப்பு குறைவை வெட்கமின்றி கடமையாக்கும் காவலோ
பச்சை துரோகமென உணர்ந்திடாத ஆயுத ஊழல் பேரங்களோ
பக்கத்துணையென நடித்து முதுகினில் குத்தும் பலரை தாங்குவீர்
தம் மண்ணின் மைந்தரை கண்மணிகளாய் காத்திடும்
தங்களுக்கு எம் தந்தையரென பாசம்பாராட்டுவதன்றி என் செய்வது!
2 comments:
நன்று.
Very nice Vinoth!!! It has the depth of sadness...
Post a Comment