Wednesday, May 19, 2021

ஈருலக சஞ்சாரம்

திறைகடல்  தாண்டி  திரவியம்  தேடுபவர்  கோடி
தூரமொரு  பொருட்டின்றி  வாழ்ந்தனர் கவிப்பாடி
திசைக்கொரு தேசமென தாயகம் விடுத்தனர்
தனம்பெருக்கவென பெரும்பான்மையினர்
தம்மக்கட் படிப்பிற்கென பலப்பேர்
தேசாதி தேசங்கள் வலம்வர சிலர்
தன்னார்வமுடனோ தள்ளப்பட்டோ தவித்தனர்
தற்கால சடுதியில் கலந்துவிட்ட புதுவுலகம்
தனதானவர்களின் நினைவிலேயே கரைந்து மறு உலகம்
தணல்போல் உவகையில் மிதக்கையில் தெரிவதில்லை
திடுக்கிடும் துக்கசேதியில் துவண்டிடும் இயலாமை
தடுமாறும் அயல்நாட்டாரின் நெஞ்சோரம்
ஈருலக சஞ்சாரம்!

-- கி.வினோத்

No comments: