வானூர்தியின் வரைபடத்தில்
உன் வசிப்பிடம்
விலகி விலகி விரைகையில்
துவங்கியது
காற்றிலாத அறையில்
மூச்சடைக்கும் உணர்வு!
மனிதர்களின் மத்தியிலும்
நீயிலாத தனிமை தருணம்
நாற்புறமும் நீர் சூழ்ந்த
தீவாய்தான் தோன்றியது!
விலைவாசியின் ஏறுமுகமாய்
இந்த இடைவெளி
காதலை பெருக்கினாலும்
இனிமேலும் வேண்டாமென
வேண்டுவது இயற்கை!
1 comment:
oru kaadhal kondavannukku, idhu unnmaai !!!
Post a Comment