சிறகுகளின் நிறம் ஒவ்வொன்றும்
எனது அகம் மற்றும் புறம் சார்ந்த
சிந்தனைகளின், பார்வைகளின் பிரதிபலிப்பு!
வாழ்க்கை பறவையின் சிறகுகளனைத்தும்
கவிதையெனத் தோன்றும் எனக்கு!
Monday, August 13, 2012
இதுவும் கவிதை
கை தூக்கி
உதடு குவித்து
புருவம் நெரித்து
புன்னகைத்தே
பொய் கோபம்
கொள்வாள் மகள்,
எனது எதிர்மறை
வினாக்கள்
சீண்டும்பொழுது!
No comments:
Post a Comment