சிறகுகளின் நிறம் ஒவ்வொன்றும்
எனது அகம் மற்றும் புறம் சார்ந்த
சிந்தனைகளின், பார்வைகளின் பிரதிபலிப்பு!
வாழ்க்கை பறவையின் சிறகுகளனைத்தும்
கவிதையெனத் தோன்றும் எனக்கு!
Monday, August 13, 2012
இரு வரிக் குரல்
மூத்தவள்
முடிந்தவரை கூச்சலிட்டு
இயன்றவரை
நெட்டித்தள்ளி
போட்டியிடுவாள்
இளையவனுடன் - அவனோ
உணவுப் பரிமாறுகையில்
இரு தட்டுக்கள் நீட்டுவான்
அவளுக்கும் சேர்த்து!
அவனது இரு வரிக் குரல்
அம்மா, அக்கா!
No comments:
Post a Comment