Wednesday, August 15, 2012

இன்றைய மாணவன்

தெருவிளக்கொளியில் அறிவு
தாகம் தணித்து
பெருங்கிணறு தாண்டி
பெரியதொரு படிப்பு
பின்னர்
சிறு தோல்வி தாளாமல்
புல் தடுக்கி வீழ்ந்து
தன்னுயிர் தானே மாய்த்தது
பரிதாபமல்ல
பயங்கர கோழைத்தனம்
அதுவரை இறைத்த அறிவு
விழலுக்குதானோ?
  

No comments: