Sunday, June 19, 2011

தேர்தலும் முடிவும்

சில சமயங்கள்தான்
நாயகர்கள் இந்த
நாட்டின் மக்கள்

சிறிதாய் சந்தோச
இறுமாப்பு
விரலில் மை ஏறியபின்

சனங்களின் நியாயமாய்
சனநாயகம்
சிரிக்கின்றது ஒருமுறை

முடிவுகள்
மூடிய மனங்களின்
நியாய முகம்

தோற்கவில்லை
மக்களாட்சியின்
மதிப்பும் பொருளும்

No comments: