சிறகுகளின் நிறம் ஒவ்வொன்றும்
எனது அகம் மற்றும் புறம் சார்ந்த
சிந்தனைகளின், பார்வைகளின் பிரதிபலிப்பு!
வாழ்க்கை பறவையின் சிறகுகளனைத்தும்
கவிதையெனத் தோன்றும் எனக்கு!
Saturday, September 11, 2010
பயம்
இளம் பிராயத்தில்
இருட்டில் நடக்கையில்
தோன்றி மறையும் உருவங்களுக்கு
பயங் கொள்வது போல்
இன்றும்
இருதயத்தின் பலவீனப் புள்ளியில்
எழுந்து வடிகின்றன
பய அலைகள்
தொடர்ச்சியாய்!
No comments:
Post a Comment