இருபதாண்டுகள் மேலாக
சிறிது சிறிதாய்
சேர்த்து வைத்திருந்தேன்...
பல கோடி பூக்களை!
இருபதே நாட்களில்
பூங்கொத்தாய் பறித்துவிட்டாய்!
எளிதில் நாம்
அருகாமை வந்தது பற்றி
இயற்பியலில் -
புவியீர்ப்பு,
காந்த ஈர்ப்பு விசை
என்றெல்லாம் சொல்கிறார்கள்!
இருப்பினும்...
இன்னும் பல புதிர்கள்
இருக்கக்கூடும்,
இனி வரும்
நம் நாட்களை
அலங்கரிக்க......
-- ஆர்வமுடன்
கி.வினோத்
No comments:
Post a Comment