Thursday, December 15, 2005

காதலன்றி வேறேது

ஒவ்வொருமுறையும்,
கலைத்துப்போட்ட சீட்டுக்கட்டினுள்,
உன் பெயர் சொல்லி
உருவியதனைத்தும்
"காதல்" என்றது
வேறெவர்க்கும் தெரியாது
எனக்குமந்த
கூண்டுக்கிளிக்கும் தவிர!
உனக்கும் தெரிவிக்க
அந்த கிளியே வரும்
புறாவாய் நாளை!

--கி.வினோத்

No comments: