Thursday, December 15, 2005

தடம்

கடற்கரையில்
ஏகத்திற்கும்
கால்தடம் பதிந்திருக்க
ஒவ்வொன்றிலும்
என் கால் வைத்து
பொருந்திப் பார்க்கிறேன்
முந்தைய
மாலைப் பொழுதுகளில்
நாமிருவரும்
இணைந்து நடந்ததில்
விட்டுச்சென்ற தடங்களை
அதற்குள்ளாகவா
அலைகள் அழித்திருக்கும்?
-- கி.வினோத்

No comments: