Thursday, December 15, 2005

பூ காதல்

வான் வெளியில்
மிதப்பதுவாய் இருந்தது.
பிறகு...
பூ தொடும் ஆசை
எனக்குமுண்டு!
எனினும்
ஒரு பூவிடமே
எனை தொடும் வேகம்
அதிசயம்தான்!!
கவிதை சுவாசிக்கும் ஆசை
கவிஞனுக்கு இயற்கை.
ஒரு கவிதையே
கவிஞன் செதுக்க விழைவதில்
இலக்கியமாகிறது அந்த சேர்க்கை!!!
-- காதலுடன்
கி.வினோத்

No comments: