ஒரு சில சிம்மங்களும்
சில நூறு நரிகளும்
பல்லாயிரம் மந்தையாடுகளுமென
மிருக இயல்பு
மனிதனுக்கு!
பசிக்கு மட்டும் புசிப்பது
பகிர்ந்து பதுங்குவது
தனது குடும்பம் பிரதானமானது
மனித இயல்பு
மிருகத்திற்கு!
சிறகுகளின் நிறம் ஒவ்வொன்றும் எனது அகம் மற்றும் புறம் சார்ந்த சிந்தனைகளின், பார்வைகளின் பிரதிபலிப்பு! வாழ்க்கை பறவையின் சிறகுகளனைத்தும் கவிதையெனத் தோன்றும் எனக்கு!