தனக்கானதாய் உலகம் பழகிய
விரியட்டுமென் எல்லையென
புலம் பெயர்ந்தேன்
வெந்நீர் நிரம்பிய வேற்றுலகிற்கு
சில மீன்கள்
வெந்து விழுப்புண் பெற்று
வெந்நீர் மீன்களாயின
வேறு சில
வெம்மை பொறுக்காமல்
விவேகமாய் திரும்பின
பெரும்பாலானவை
வெம்மையும் பழகாமல் தண்ணீரும்
திரும்பாமல் தள்ளாடின
அனுதினம் புதிதாய்
கொதிநீர் ஊற்றபடுவதாய்
உணர்வு எனக்கு
தண்ணீர் தேசம் திரும்பி
ஆற வைக்கலாமென
நாட்கள் நீந்தப் பயில்கின்றேன்

1 comment:
http://enbharathi.blogspot.com/2009/04/blog-post_15.html
Post a Comment