இன்றும்
நேற்று -
நிரம்பி நிற்கின்றது
நிறங்கள் தோய்ந்த
நினைவுகளில்!
இன்று -
நிறம் தேய்ந்த
நினைவுகளுடன் புதிய
நிகழ்வுகளில்!
நாளை வந்து
அறிவுறுத்தியது
சுகம் துக்கம்
எதுவாயினும்
இதுவும்
கடந்து போகும்!
-- கி.வினோத்
சிறகுகளின் நிறம் ஒவ்வொன்றும் எனது அகம் மற்றும் புறம் சார்ந்த சிந்தனைகளின், பார்வைகளின் பிரதிபலிப்பு! வாழ்க்கை பறவையின் சிறகுகளனைத்தும் கவிதையெனத் தோன்றும் எனக்கு!




முதற்கணை வீசியதில்
முதன்முறை கொஞ்சியதில்
முத்தாய்ப்பாய் கைப்பற்றியதில்
முறுவலுடன் இதழ் பதித்ததில்
முழுவதுமாய் மெய் சேர்கையில்
என அவ்வபொழுது
தேவதையாகின்றாய்
பட்டுப் புழு
பட்டாம்பூச்சியாவது போல்!
இன்னும் எத்தனை
பட்டுப் புழு உன்னுள்?
-- கி.வி
14/02/2006