Sunday, December 09, 2018

குடைச்சல்

எனது மேல் மாடியில்
எலியொன்றின் இடைவிடாத
அலைச்சல்
எனது காதுக்குள் புகுந்து
மண்டை முழுவதும் பரவி
மறு காதுவழி வெளியேறுவதாய்
குடைச்சல்
திமிறும் எலியினை சிறையெடுத்து
தூக்கி வீசி
அமைதி வாழ்வு வாழ ஆசைதான்
அன்றி
அதன் இருக்கை மறந்து
இயல்பாய் நடித்து
சிந்தை செலுத்துகின்றேன்
எங்கோவொரு மூலையில்
எலி வசித்துக் கொண்டுதானிருக்கின்றது

--கி.வினோத்

3 comments:

sadhasivam said...

Semma reflection of Project Management ;) LOL i agree.

sadhasivam said...

feel like Nakul kavithagal. Great one
```
ராமச்சந்திரனா? என்று கேட்டேன்
ராமச்சந்திரன். என்றார்.
எந்த ராமச்சந்திரன்? என்று நான் கேட்கவில்லை
அவர் சொல்லவுமில்லை
என்று நான் கேட்கவில்லை
அவர் சொல்லவுமில்லை

```

கி.வினோத் said...

அருமை! Abstraction கவிதையில் அழகு மட்டும் அல்ல, வாசகர்களை வசீகரிக்கும்!