Monday, August 21, 2017

இயலாமை

இன்றாவது
எப்பாடுபட்டேனும்
எனது ரொட்டியை சிதறடிக்காமல்
இலாவகத்துடன் முடித்தல்வேண்டி
முற்பட்டேன் முடியவில்லை

ஏனைய முறைகள் போலவே
கவனம் ரொட்டியிலும்
பிறர் பார்வையிலும்
கழிந்ததில்
சுவையினை மறந்து
எனக்கான சிறுசுகத்தினையும் துறந்து
ஏமாற்றமே மிஞ்சியது

பசிக்கு புசிப்பவன்
பிறர் கண்களுக்காக வாழ்வதில்லை

No comments: