Sunday, January 08, 2017

ஜல்லிக்கட்டு

ஆறேழு வயதிருக்கும்
ஆக்ரோஷமான காளைகள்  அடக்கும்
ஜல்லிக்கட்டு பார்த்த முதன்முறை.

தெருவெங்கும் திருவிழாக்கோலம்
தலைகள்மட்டுமே  தட்டுப்படும் நெரிசலில்
தந்தை தோள் மீதேறி ஆசனம்.

வகை வகையாய் மாடுகள் சீறின
அடுத்ததடுத்து ஆண்பிள்ளைகள்
அடக்கமுற்பட்டது பெரும் சாகசம்.

வேகம் விவேகம் பலமும் பிரயோகிக்கும்
வீர விளையாட்டு என படித்ததும்
வேடிக்கை பார்த்ததும் சிலிர்ப்புதான்.

வளர்ந்துவந்த வயதுகளில்
தமிழ் திரையிலும் தொலைக்காட்சியிலும்
தவறாமல் கண்டதுண்டு ஜல்லிக்கட்டை

திடுமென திருந்திய சிலசாரார்
மிருக வதையெனவும் மனித வன்மமெனவும்
தடைவிதித்தது தமிழனுக்கு பெரும் துரோகம்

இனியென் பிள்ளைகளுக்கு
எமது வரலாறு எடுத்துரைக்கயில்
எங்கணம் விளக்குவது இந்த வீர விளையாட்டை?    

2 comments:

murthi said...

இன்றைய நிலை நல்ல வெளிபாட

Unknown said...

Good one Vinoth!