Wednesday, December 17, 2014

சாத்தான் செயல்

பூக்கள் நசுக்குவதே
தீவிரவாதமெனில் - இளம்
மொட்டுக்கள் பொசுக்குவது
சாத்தானின் செயலா?
கொடுங் கோழையடா நீ!
உன் வேதத்தில்
இளந்தளிர்கள் அற்பணிப்பதை 
என்னவென்று சொல்வார்கள்?
உனக்கு வேதம் ஓதியவனை,
உனக்கென வேலை செய்தவனை
கொணர்ந்து கைகால் வெட்டி 
பிள்ளைகளுக்கு பாடமெடுக்க 
பணித்தாலும் அடங்காது
இன்னுயிர் நீத்த ஆத்மாக்கள்!

No comments: