Wednesday, December 17, 2014

சாத்தான் செயல்

பூக்கள் நசுக்குவதே
தீவிரவாதமெனில் - இளம்
மொட்டுக்கள் பொசுக்குவது
சாத்தானின் செயலா?
கொடுங் கோழையடா நீ!
உன் வேதத்தில்
இளந்தளிர்கள் அற்பணிப்பதை 
என்னவென்று சொல்வார்கள்?
உனக்கு வேதம் ஓதியவனை,
உனக்கென வேலை செய்தவனை
கொணர்ந்து கைகால் வெட்டி 
பிள்ளைகளுக்கு பாடமெடுக்க 
பணித்தாலும் அடங்காது
இன்னுயிர் நீத்த ஆத்மாக்கள்!

Thursday, July 24, 2014

புலம்பெயர்தல்

கருவறையினுள் கைவிட்டு
கொடியுடன் பிடுங்கி
தூர எறிதல் போல் 
இந்த புலம்பெயர்தல்!
கதி கலங்கியது 
கருவறையே பொசுங்கியதும்.
உயிர் பயமோ,
உயிர் வலியோ,
தூரத்து விடியலை 
துரத்தியே 
முடிவற்ற  ஓட்டம்...

Sunday, May 04, 2014

வீர மரணம்

மாண்டபின் மண்ணோ விண்ணோ
சடுதியில் விடுகின்ற உயிரின் மதிப்பு
விலை மதிப்பற்ற தியாகமாகும்
நாட்டிற்காகவோ
நம்மை சார்ந்தவர்காகவோ
பிரியும்பொழுது.