



முதற்கணை வீசியதில்
முதன்முறை கொஞ்சியதில்
முத்தாய்ப்பாய் கைப்பற்றியதில்
முறுவலுடன் இதழ் பதித்ததில்
முழுவதுமாய் மெய் சேர்கையில்
என அவ்வபொழுது
தேவதையாகின்றாய்
பட்டுப் புழு
பட்டாம்பூச்சியாவது போல்!
இன்னும் எத்தனை
பட்டுப் புழு உன்னுள்?
-- கி.வி
14/02/2006
2 comments:
Nice Poem...
I feel that if last 2 lines are taken out - Kavithai will be more powerful.
Its just an openion!!!
வாசு, பாலு,
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி,
எனக்கும் சரி என பட்டதால்,
கடைசி 2 வரிகளை ஒதுக்கிவிட்டேன்!
-கி.வி.
Post a Comment