Sunday, January 08, 2017

மானத் தமிழனடா

மானத் தமிழனடா நாங்கள்
முன்பொரு காலத்தில்

வீரத்தையும் வேகத்தையும் விதைத்து
நெஞ்சினில் ஈரத்தையும் தெளித்து
நேர்மையும் நேசத்தையும் கலந்து
மானத்தையும் ரோசத்தையும் கரைத்து
வளர்ந்த வெகுமானத் தமிழனடா நாங்கள்

ஆறுகளின் ரேகைகளிருந்தும்  நீர்வரவின்றி
அணல்மின் நிலையமா தமிழ்நாட்டில் திணித்து
மீத்தேன் எடுக்கலாம் தஞ்சை பசுமையழித்து
சேது சமுத்திரம் ஒரு விளையாட்டு போலாகி
விஷமருந்திய விவசாயிகள் பலநூறாகி
வாழ்க்கையோடு பிணைந்த ஜல்லிக்கட்டும் தொலைத்து
அம்மாவை இழந்ததும் சின்னம்மா துதிபாடி
இடுக்கண் அனைத்தும் இன்டர்நெட் மீம்ஸ் வரைந்து
இன்றைய தேதியில்  
அவமான தமிழனடா நாங்கள்

--கி.வினோத்

ஜல்லிக்கட்டு

ஆறேழு வயதிருக்கும்
ஆக்ரோஷமான காளைகள்  அடக்கும்
ஜல்லிக்கட்டு பார்த்த முதன்முறை.

தெருவெங்கும் திருவிழாக்கோலம்
தலைகள்மட்டுமே  தட்டுப்படும் நெரிசலில்
தந்தை தோள் மீதேறி ஆசனம்.

வகை வகையாய் மாடுகள் சீறின
அடுத்ததடுத்து ஆண்பிள்ளைகள்
அடக்கமுற்பட்டது பெரும் சாகசம்.

வேகம் விவேகம் பலமும் பிரயோகிக்கும்
வீர விளையாட்டு என படித்ததும்
வேடிக்கை பார்த்ததும் சிலிர்ப்புதான்.

வளர்ந்துவந்த வயதுகளில்
தமிழ் திரையிலும் தொலைக்காட்சியிலும்
தவறாமல் கண்டதுண்டு ஜல்லிக்கட்டை

திடுமென திருந்திய சிலசாரார்
மிருக வதையெனவும் மனித வன்மமெனவும்
தடைவிதித்தது தமிழனுக்கு பெரும் துரோகம்

இனியென் பிள்ளைகளுக்கு
எமது வரலாறு எடுத்துரைக்கயில்
எங்கணம் விளக்குவது இந்த வீர விளையாட்டை?