சிறகுகளின் நிறம் ஒவ்வொன்றும்
எனது அகம் மற்றும் புறம் சார்ந்த
சிந்தனைகளின், பார்வைகளின் பிரதிபலிப்பு!
வாழ்க்கை பறவையின் சிறகுகளனைத்தும்
கவிதையெனத் தோன்றும் எனக்கு!
இளம் பிராயத்தில்
இருட்டில் நடக்கையில்
தோன்றி மறையும் உருவங்களுக்கு
பயங் கொள்வது போல்
இன்றும்
இருதயத்தின் பலவீனப் புள்ளியில்
எழுந்து வடிகின்றன
பய அலைகள்
தொடர்ச்சியாய்!