மெழுகாய் அன்புநெகிழ்ந்து உருகி
வெள்ளிபோல் காதல்கசிந்து இருகி
பதினாறு தொட்டது
எம் திருமணத்தின் அகவை!
ஒரே நாளில் விருட்சமாகிடவில்லை
ஒவ்வொரு வருடமாய் வளர்ந்தது
முட்களும் பூக்களுமாய் மலர்ந்தது!
துயிலா இரவுகளுக்கு விடியலாய் நீயும்
வலியான பகல்களின் அஸ்தமனமாய் நானும்
சமன்செய்யும் வண்டிமாடுகளாய் ஈடுகொடுத்தே
முன் நகரும் தாம்பத்தியம்!
சிறு கவிதையாய் மகளும்
சிறு கதையாய் மகனும்
சங்கமத்தின் இலக்கிய வெளிப்பாடு!
இணைப்பிரியா அன்னப்பறவைகளாய்
தொடுவானம்வரை நீந்திச் செல்வோம்!
-- கி.வினோத்