Wednesday, March 01, 2017

தற்காப்பு!

வாடிவாசல் முதல் நெடுவாசல் வரை
வீடு வாசல் விடுத்து
தகிக்கும் தமிழினம்!
மாடும் மாண்பும் நிலைக்க குரலெடுத்தவன்
காடும் உழவும் காக்க விரைகின்றான்!
அழிவிற்கு துணைபோவது தியாகமெனவும்
அநீதி எதிர்ப்பது தேசத்துரோகமெனவும்
புதுமொழி சொல்கிறார் கோமாளியவர்!
இதயம் பிளந்து குருதியெடுப்பதும்
இயற்க்கை பிழிந்து வளங்கள் அழிப்பதும்
ஈனச் செயல்கள் என்று புரியுமோ?
மாற்றம் வேண்டிய போராட்டம் முன்னது
ஏற்றம் போற்றும் தற்காப்பு இன்றையது!
- கி. வினோத்