Wednesday, August 10, 2016

தனிமை

எனது அருகாமை வெற்றிடங்களில் நீயே பரவியதால் காற்றாகவும்
எனது நினைவலைகளின் நடுவில் நீயே நிரம்பியதால் சிந்தனையாகவும்
எனது தூக்கத்தின் தவிப்பில் நீயே தோன்றியதால் கனவாகவும்
எனது கைபேசியின் அழைப்புகளில் நீயே நிறைந்ததால் பேச்சாகவும்
எனது தனிமைக்கு இணையாக நீயே நிற்பதால் நானாகவும்
தள்ளி சென்று பிரிந்ததற்கான அறிகுறிகளின்றி அருகில் வாழ்கின்றாய்!
- கி.வினோத்