நாடே பரபரப்பாய்
பற்றி எரிகின்றது
ஊழல் உச்சம்
அரசியல் அசிங்கம்
எதிர்மறை அரசு
செயலற்றதாகவோ
செயல் பதற்றமாகவோ
அனைத்தும் அமைதியாக
கவனித்தபடி கூண்டுக்குள்
மகாத்மா காந்தி சிலை!
-----------
ஒரு மகாத்மாவினால்
வெள்ளையனை
வெளியேற்ற முடிந்தது
ஒராயிரம் மகாத்மாக்கள்
இருந்தும்
காப்பாற்ற இயலாமல்
பரிதவிக்கும் நிலை
நம் நாட்டிற்கு!