



முதற்கணை வீசியதில்
முதன்முறை கொஞ்சியதில்
முத்தாய்ப்பாய் கைப்பற்றியதில்
முறுவலுடன் இதழ் பதித்ததில்
முழுவதுமாய் மெய் சேர்கையில்
என அவ்வபொழுது
தேவதையாகின்றாய்
பட்டுப் புழு
பட்டாம்பூச்சியாவது போல்!
இன்னும் எத்தனை
பட்டுப் புழு உன்னுள்?
-- கி.வி
14/02/2006