சிறகுகளின் நிறம் ஒவ்வொன்றும்
எனது அகம் மற்றும் புறம் சார்ந்த
சிந்தனைகளின், பார்வைகளின் பிரதிபலிப்பு!
வாழ்க்கை பறவையின் சிறகுகளனைத்தும்
கவிதையெனத் தோன்றும் எனக்கு!
வளர்ந்து, கிளைவிட்டு, உடலெங்கும் முகிழ்ந்து, பூத்து சாமரம் வீசியது அந்த அதிசய விருட்சம்! எனது தயக்கத்திற்கும் உனது தயக்கத்திற்குமான, எனது இசைவிற்கும் உனது இசைவிற்கும் இடையிலான நொடிப்பொழுதில் அசுரத்தனமாய் வளர்ந்தது அந்த அதிசய விருட்சம்!